திருக்குறள்: நூல் குறிப்பு

 திருக்குறள்

நூல் குறிப்பு :

  1. திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல்
  2. குறள் ➝இரண்டடி வெண்பா
  3. திரு ➝சிறப்பு அடைமொழி
  4. குறள் 80 குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்ந்துவதால் ➝ ஆகுபெயர்
  5. திருக்குறள் ➝ அடையெடுத்த கருவியாகுபெயர்
  6. திருக்குறளின் முதல் பெயர்➝ முப்பால்
  7. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  8. திருக்குறள் 3 முப்பால் பிரிவுகளையும் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டது
  9. அறத்துப்பால்➝38 அதிகாரங்கள்➝4 இயல்கள் பாயிரவியல் (4), இல்லறவியல் (20), துறவறவியல் (13), ஊழியல்(01)
  10. பொருட்பால்➝70 அதிகாரங்கள் ➝ 3 இயல்கள் அரசியல் (25), அமைச்சியல்(32), ஒழிபியல்(13)
  11. காமத்துப்பால்➝25அதிகாரங்கள்➝ 2இயல்கள் களவியல்(7), கற்பியல்(18)


இந்தப் பிரிவுகள் கூறுவன :

  • தனிமனிதனது வாழ்வை கூறுவது --> அறத்துப்பால்
  • சமுதாய வாழ்வை கூறுவது -->பொருட்பால்
  • அக வாழ்வை கூறுவது--> இன்பத்துப்பால்


வேறு பெயர்கள் :

  1. உலகபொதுநூல்
  2. அறவிலக்கியம்
  3. தமிழர் திருமறை
  4. முப்பால்
  5. பொய்யாமொழி
  6. வாயுறைவாழ்த்து
  7. உத்தரவேதம்
  8. தெய்வநூல்
  9. திருவள்ளுவம்
  10. தமிழ்மறை
  11. பொதுமறை
  12. திருவள்ளுவ பயன் (நச்சினார்க்கினியர்)
  13. பொருளுரை (மணிமேகலை)
  14. முதுமொழி
  15. தமிழ் மாதின் இனிய உயர்நிலை (கவிமணி)
  16. நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
  17. திருவள்ளுவ பயன் எனக் கூறியவர் -----நச்சினார்க்கினியார்
  18. தமிழ் மாதின் இனிய உயிர் நிலை ---கவிமணி
  19. தேவர் எனக் கூறியவர் ---நச்சினார்க்கினியர்
  20. தெய்வப்புலவர் என கூறியவர்-- இளம்பூரணார்
  21. பொருளுரையெனக் கூறியவர் ---சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
  22. பொய்யில் புலவர் எனக் கூறியவர் --சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)

திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :

  • நாயனார்
  • தேவர்(நச்சினார்கினியர்)
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர் (இளம்பூரணார்)
  • நான்முகனார்
  • மாதானுபங்கி(தாய்க்கு நிகரானவர்)
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர் (மணிமேகலை)
  • பொய்யாமொழிப் புலவர்
  • வான்புகழ் வள்ளுவர்
  • உரையாசிரியர்கள் :
  • மணக்குடவர்
  • பரிமேலழகர்
  • பரிப்பெருமாள்
  • திருமலையர்
  • மல்லர்
  • தருமர்
  • காளிங்கர்
  • தாமத்தர்
  • பரிதி
  • நச்சர்
  • இவர்கள் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மர் ஆவர்
  • சிறந்த உரை பரிமேலழகர் உடையது
  • முதன் முதலில் உரையிட்டவர்--- மணக்குடவர்
  • முதன் முதலில் அச்சிட்டவர்----- தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)
  • உரை எழுதியவர்கள் காலத்தால் முந்தியவர் ----தருமர்
  • காலத்தால் பிந்தியவர் ---பரிமேலழகர்
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்
  • பரிமேலழகர் உரையுடன் முதல் முதலில் திருக்குறள் வெளியிட்டவர் ---ராமானுஜ கவிராயர்
  • "தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தார் இவர்கள்" என்பது பழம்பாடல்


புதியது பழையவை